பாகிஸ்தானில் வன்முறை- போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் 100 பேர் படுகாயம்!

user 13-May-2024 உலகம் 6 Views

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.

 

இந்தநிலையில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு மக்களுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய கோரியும் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அதன்படி தகவலறிந்த போலீசார் போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் தாக்கியதால் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் மேலும் 78 போலீசார் உள்பட 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பான அவசர கூட்டத்துக்கு ஜானாதிபதி ஆசிப் ஆலி சர்தாரி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை