டயானா கமகே பிணையில் விடுதலை

user 21-May-2024 இலங்கை 9 Views

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த பிரேரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில், பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இலங்கை பிரஜாவுரிமை இன்றி கடவுச்சீட்டு பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள டயானா கமகே, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் தனது சட்டத்தரணிகளுடன் இணைந்து கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தேடுதலுக்கு பயந்து தலைமறைவாகியதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதில் வழங்கவே டயானா கமகே மன்றில் முன்னிலையானார் என அவரது சட்டத்தரனி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தலைமறைவாகியள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவானிடம் நேற்று தெரிவித்திருந்தனர்.

டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) கொழும்பு பிரதான நீதவான் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

 

இதனடிப்படையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், டயானா கமகேவை குற்றப் புலனாய்வு திணைக்களம் சந்தேக நபராக பெயரிட்டிருந்தது.

மேலும், கொழும்பு பிரதான நீதவானிடம் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது இல்லத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை