நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை-உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

user 03-Jun-2024 இலங்கை 2 Views

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதுடன், ஐவர் காணாமல் போயுள்ளனர்.

 

கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இதனைக் தெரிவித்தார்

அத்துடன் சீரற்ற வானிலையினால் 2,313 குடும்பங்களைச் சேர்ந்த 23,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான நிதியை ஜனாதிபதி உடனடியாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

மேலும், இந்த அனர்த்தங்களின் பின்னர் ஏற்படும் பின்விளைவுகள் தொடர்பில் தாம் உடன் கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை