கனேடிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிளுடன் விசேட சந்திப்பை மேற்கொண்ட கபே அமைப்பு

user 09-Jul-2024 இலங்கை 10 Views

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( CaFFE) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் பிரிவு பிரதிநிதிகளுடன் அண்மையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

கணேடிய உயர்ஸ்தானிகராலய இரண்டாவது செயலாளர் (அரசியல்) பேட்ரிக் பிக்கரிங் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர் .ஜி.சாஹித்யனன் ஆகியோர் இராஜகிரியவில் உள்ள கபே தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்வரவிருக்கும் தேர்தலுக்கான தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைககள், கடந்தகால தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்காளர்கள் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அரசியலில் பெண்கள் பங்கேற்பு போன்றவற்றை உள்ளடக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் கபே குழுவுடனான கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.

இந்த கலந்துரையாடலில் கபே நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ஷவும் கலந்து கொண்டார். 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை