துருக்கி படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்: 16 பயங்கரவாதிகள் பலி

user 29-Jul-2024 பொருளாதாரம் 11 Views

சிரியா (Syria) மற்றும் ஈராக்கில் (Iraq) 16 பயங்கரவாதிகள், துருக்கி (Turkey) படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

துருக்கியில் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) கடந்த 1980-களில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த அமைப்புக்கு சிரியாவிலும், ஈராக்கிலும் செயல்பட்டு வரும் குா்துப் படையினா் உதவி அளிப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, அந்தப் படையினரின் நிலைகள் மீது துருக்கி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது வடக்கு ஈராக்கைச் சேர்ந்த ஹகுர்க், காரா, அசோஸ் ஆகிய பகுதிகளில் துருக்கி நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

 

அத்துடன், வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை