இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தமிழர் !

user 23-Mar-2024 இலங்கை 10 Views

முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் தமிழர் ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுதந்திரபுரம் திட்டத்தில் பணியாற்றிய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இராணுவ மரியாதையுடன் அடக்கம் இந்நிலையில் முல்லைத்தீவில் உயிரிழந்த தமிழ் சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடலம் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த குடும்பஸ்தரது இறுதிக்கிரியைகள் கடந்த 20 ஆம் திகதி விசுவமடு பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் இறுதி அஞ்சலியுடன் உடலம் வெள்ளப்பள்ளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை