Monday, September 16, 2024
மறைந்த ஈரான் ஜானாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது
மோசமான வானிலை மற்றும் விமானத்தின் எடையை கட்டுப்படுத்த முடியாமல் விமானம் விபத்துக்குள்ளானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கடந்த மே மாதம் நடந்த விபத்தில் ஈரான் ஜானாதிபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்
விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானம் தாக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் வெளிப்புற தாக்கங்கள் ஏற்பட்டதா என்பது தெரியவரவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியபோது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இரண்டு பேர் அதில் இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.