Monday, September 16, 2024
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் தினம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, அனைத்து விடயங்களும் நாளைய தினம் (26) வெளியிடப்படும் என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே திங்கட்கிழமை (26) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.