Monday, September 16, 2024
இலங்கையில் ஒரு அரசியல் அதிசயத்தை அதிபர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தியுள்ளதாக நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது டுவிட்டர் (twitter) பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “18 மாதங்களுக்கு முன்பு நாடு அதன் ஆழமான பொருளாதார நெருக்கடியில் இருந்தது.
அப்போதைய அதிபரை மக்கள் வீழ்த்தியதுடன் தற்போது நிலத்தில் ஸ்திரத்தன்மை திரும்பி பணவீக்கம் குறைவாக உள்ளதுடன் மின்வெட்டு மற்றும் எரிபொருளுக்காக அணிவகுத்து நிற்பது கடந்த கால விடயங்கள்.
பல இலங்கையர்களுக்கு வாழ்க்கை இன்னும் கடினமாக உள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல துன்பங்கள் உள்ளன ஆனால் இலங்கை முன்னோக்கிப் பார்க்க ஆரம்பிக்கலாம்.
சிறந்த எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க தப்பி ஓடாதவர்.
கொழும்பில் எனது பழைய நண்பர்களான ரணில் மற்றும் அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவு அருந்தியது அருமையாக இருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.