ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஹிஸ்புல்லா அதிருப்தி

user 08-Jul-2024 இலங்கை 13 Views

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை அடிப்படையில் ஒரு தனி வேட்பாளர் போட்டியிடுவதால் எந்தவொரு பயனும் இல்லை என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்ட இடத்துக்கு நேற்று (07.07.2024) சென்று பட்டதாரிகளை சந்தித்துள்ளார். 

இதன்போது, அவரிடம், ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

"இப்பொழுது ஆட்சியல் இருக்கின்ற ஜனாதிபதி கூட தேர்தலில் போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது. உண்மையில் வேட்பாளர்கள் எல்லோரும் தெரிவு செய்யப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என தீர்மானம் எடுக்கும்.

அதேவேளை, தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு சிறுபான்மை கட்சி. சிறுபான்மையை சேர்ந்த அடிப்படையில் அவ்வாறு ஒரு தனிவேட்பாளர் போட்டியிடுவதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

வெறுமனவே இரண்டு இலட்சம் மூன்று இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் எந்தவொரு நன்மையும் இல்லை.

தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கம் தொடக்கம் காணி பிரச்சினை போன்ற நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. 

அவற்றை தீர்த்து வெற்றி பெறக்கூடிய ஒரு வேட்பாளரை அடையாளம் கண்டு அவருக்கு இருக்கின்ற இலட்சக்கணக்கான வாக்குகளை கொடுத்து அவருடன் உடன்படிக்கையை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பொருத்தமானது என்பது என்னுடைய எனது தனிப்பட்ட கருத்து. 

அதேவேளை, 2015ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்கின்ற போது சட்டத்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம் உட்பட எல்லோரும் தவறிழைத்து விட்டார்கள்.

மேலும், இது தொடர்பாகவும் பட்டதாரிகளின் நியமனக் கோரிக்கை தொடர்பாகவும் கிழக்கு மாகாண அளுநரிடம் கலந்துரையாடி அவரை சந்திக்க வாய்ப்பு எற்படுத்துவதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை