கஞ்சிபானை இம்ரான் கைது!

user 01-Aug-2024 இலங்கை 11 Views

பிரபல வர்த்தகரான கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை  இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பெற்ரி, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் தலைமறைவாகியிருந்த கஞ்சிபானை இம்ரான் பொலிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், லொக்கு பெற்ரி, டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானால் திட்டமிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பெற்ரி என்பவரால் இந்த கொலை வழி நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பிரான்சில் பதுங்கியிருந்த கஞ்சிபானை இம்ரான், பிரான்ஸ் எல்லை வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை