தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும்

user 06-Aug-2024 இலங்கை 13 Views

எமது நாட்டு அரசியலை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறும் தொழிலாக மாற்ற முடியும் என அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆயுதப்படைகளின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் இடம்பெறும் இவ்வாறான விரும்பத்தகாத அரசியல் நிகழ்வுகள் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை.

மேலும், மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) அப்பா என்று அழைத்தவர்கள் தற்போது ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) அப்பா எனவும் அழைக்கின்றனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை