தமிழர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி !

user 21-Aug-2024 இலங்கை 6 Views

தமிழர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட ஒருவர்   காவல்துறையினரால்   கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது சம்பவம் நேற்று (20) வவுனியா (vavuniya) - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினரால்   தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா இராணு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஓமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை